இந்தியா

வீட்டிலிருந்து பணிபுரியும் பிபிசி ஊழியர்கள்!

வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடத்தி வருவதால், ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து பணிபுரிய லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி அறிவுறுத்தியுள்ளது. 

DIN

வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடத்தி வருவதால், ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து பணிபுரிய லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி அறிவுறுத்தியுள்ளது. 

தில்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 20 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். 

வருமான வரித் துறை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் பிபிசி துணை நிறுவனங்களின் சா்வதேச வரி விவகாரங்கள் தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தில்லி, மும்பை அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து பணிபுரிய பிபிசி அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், வருமானவரித் துறையினர் தனிப்பட்ட ஊதியம் குறித்து கேள்வி கேட்டால், பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஊதியம் தொடர்பான மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளிக்குமாறும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT