சோம்நாத் கோயிலுக்கு ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கினார்.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கினார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் இன்று குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்றனர்.
அப்போது அவர்களை, கோயில் அறக்கட்டளை தலைவர் பி.கே.லஹிரி மற்றும் செயலளர் யோகேந்திரபாய் தேசாய் ஆகியோர் வரவேற்றனர்.
இதையும் படிக்க- பிப்ரவரி 23-ல் அமித்ஷா கர்நாடகம் பயணம்
பின்னர் முகேஷ் அம்பானியும், ஆகாஷ் அம்பானியும் சுவாமி முன் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து சோம்நாத் கோயில் அறக்கட்டளைக்கு முகேஷ் அம்பானி ரூ.1.51 கோடி நன்கொடை அளித்தார்.