இந்தியா

உ.பி. பேரவையில் பரபரப்பு! ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோஷம்

DIN

உத்தர பிரதேசம் பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா இன்று தாக்கல் செய்தார். 

முன்னதாக இன்று காலை சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையின்போது அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். 'ஆளுநரே திரும்பிப் போ' என அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT