ஷிவமோகா விமான நிலையத்தை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி 
இந்தியா

ஷிவமோகா விமான நிலையத்தை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரவிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கவிருக்கிறார்.

ANI


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரவிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கவிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் நிறைவுற்ற பல நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடக்கி வைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷிவமோகா விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு, விமான நிலையத்துக்குள் நடந்து சென்று நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவிருக்கிறார். பின்னர். ஷிவமோகா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் நிறைவுற்றப் பணிகளைத் தொடக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார் பிரதமர் மோடி.

ரூ.450 கோடிச் செலவில் ஷிவமோகா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகள் வரை கையாளும் வகையில் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT