இந்தியா

காஷ்மீரி பண்டிட்டைக் கொன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை!

காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

DIN

காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

இதுகுறித்து காஷ்மீர் ஏடிஜிபி விஜய்குமார் கூறுகையில், பாதுகாப்புப் படையினருடன் இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி சஞ்சய் சர்மாவை சுட்டுக்கொன்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்ட பயங்கரவாதி அகிப் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டார். 

ஞாயிற்றுக்கிழமை காலை புல்வாமாவில் உள்ள அச்சானில் அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வங்கிக் காவலாளியான ஷர்மா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

அங்கிருந்தவர்களால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

புல்வாமாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் திங்கள்கிழமை காஷ்மீரி பண்டிட் சர்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT