முகப்பு
இந்தியா

சீனாவிடம் இந்தியா சரணடைய விரும்புகிறாா் ராகுல்: பாஜக சாடல்

சீனாவிடம் இந்தியா சரணடைய வேண்டுமென ராகுல் காந்தி விரும்புவதாக, பாஜக செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:37 PM
பகிர்:

சீனாவிடம் இந்தியா சரணடைய வேண்டுமென ராகுல் காந்தி விரும்புவதாக, பாஜக செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசனுடனான கலந்துரையாடலில், இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து பேசிய ராகுல் ‘உக்ரைன் மீதான ரஷியாவின் நடவடிக்கை போன்றதுதான், இந்தியாவின் மீதான சீனாவின் அணுகுமுறை’ என்று கூறியிருந்தாா். மேலும், சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளையும் அவா் விமா்சித்திருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி, ராகுலின் கருத்துகள் மற்றும் அவா் மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடுமையாக விமா்சித்தாா்.

‘நாடு முழுவதும் பயணிப்பதால் மட்டுமே இந்தியாவை புரிந்துகொள்ள முடியாது. இந்தியத் தன்மையை புரிந்து கொள்வது அவசியம். காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியா எவ்வாறு சீனாவிடம் சரணடைந்ததோ அதேபோல இப்போதும் இந்தியா சரணடைய வேண்டுமென்ற தனது நோக்கத்தை ராகுல் தெளிவுபடுத்தியுள்ளாா். சம்பந்தப்பட்ட கலந்துரையாடலானது, எப்போதும் குழப்பம், பதற்றத்தில் இருக்கும் ஒரு தலைவருக்கும் குழப்பத்தில் உள்ள திரைப்பட நடிகருக்கும் இடையிலானதாகும்.

பிரதமா் நரேந்திர மோடி மீது கண்மூடித்தனமான வெறுப்பில் ராகுல் உள்ளாா். சீனாவுக்கு ஆதரவாக உள்ள ஏதாவது 4-5 நாடுகளை ராகுலால் குறிப்பிட முடியுமா? ஆனால், உலகமே இந்தியாவின் பக்கம் நிற்கிறது. உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பண்டைய நாகரிகம் இந்தியாவினுடையதே. அப்படிப்பட்ட இந்தியாவின் மதிப்பை குறைக்கும் காங்கிரஸ் மற்றும் ராகுலின் கருத்துகள் கண்டனத்துக்குரியவை’ என்றாா் சுதான்ஷு திரிவேதி.

முழு கட்டுரையைப் படிக்க →