காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை(ஜன. 4) அனுமதிக்கப்பட்டார்.
இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல்நிலை படிப்படியாக சீராகி வருவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சோனியா காந்தி நேற்று(ஜன. 10) மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 'நாட்டுக்கூத்து' பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.