இந்தியா

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

தில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்து கொண்டார்.

DIN

தில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்து கொண்டார்.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேசிய செயற்குழு கூட்டத்தின் மூன்று தீர்மானங்களும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தலைவர்களிடம் தேர்தலுக்காக பெரிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT