மகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கோவா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பழநியில் இன்று(ஜன. 19) ரோப் கார் சேவை இயங்காது!