இந்தியா

மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் முடிவடைந்ததையடுத்து இன்று கோயில் நடை சாத்தப்பட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக சபரிமலை வந்தனர்.

மகரஜோதி தரிசனத்துக்காக சபரிமலை வருகை தந்திருந்த பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தேவஸ்வம் வாரியமும் மாநில அரசும் மேற்கொண்டிருந்தன.

இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தயடுத்து இன்று (ஜன. 20) கோயில் நடை சாத்தப்பட்டது. 

தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. பிப். 12 முதல் 17 ஆம் தேதி வரை சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தா்களே அனுமதிக்கப்பட்ட இந்தாண்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT