கோப்புப் படம் 
இந்தியா

அரசுப் பள்ளி சத்துணவில் தினை வகைகள்!

மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் வகையில், புத்தாக்க தொழில் நிறுவனம் தானியங்களை வழங்க முன்வந்துள்ளது. 

DIN

புணேவில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் தினை வகையை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் வகையில், புத்தாக்க தொழில் நிறுவனம் தானியங்களை வழங்க முன்வந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் அக்ரோஜீ ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம், சிறு-குறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து தினை வகைகளைப் பெற்று விற்பனை செய்து வருகிறது. 

இந்நிலையில், இந்த நிறுவனம் புணேவிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு சத்துணவில் தினை வகைகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 

அதற்காக, முதல்கட்டமாக புணேவின் புரந்தரா தாலுகாவிலுள்ள 7 அரசுப் பள்ளிகளில் தினைப் பொருள்களை அந்நிறுவனம் வழங்கவுள்ளது.  இந்த தாலுகாவிலுள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றிலும் 300 மாணவர்கள் பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

SCROLL FOR NEXT