இந்தியா

ஹைதராபாத்தில் முர்மு: அல்லூரி சீதாராம ராஜுவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு!

சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஹைதராபாத் வந்துள்ளார். 

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஹைதராபாத் வந்துள்ளார். 

முர்முவை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் பல மாநில அமைச்சர்கள் அவரை ஹக்கிம்பேட் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று முர்மு உரையாற்ற உள்ளார். கடந்தாண்டு ஜூலை 4-ம் தேதி ஆந்திரத்தின் பீமாவரத்தில் சீதராமா ராஜுவின் 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

1897 ஜூலை 4ல் பிறந்த அல்லூரி சீதாராம ராஜு, பழங்குடி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர். 1922ல் தொடங்கப்பட்ட ராம்பா கலகம் எனப்படும் போராட்டத்தை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT