இந்தியா

அமர்நாத் யாத்திரையின்போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் உற்சாகமாக குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். 

DIN

வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் உற்சாகமாக குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.  

62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை  ஜூலை 1-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரை பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தாண்டு அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் 67 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

அமர்நாத் யாத்திரையில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு-காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் சர்வதேச எல்லையிலிருந்து கட்டுப்பாடு கோடு வரையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

அமர்நாத் யாத்திரையின்போது பயணிகள் கடைபிடிக்க வேண்டியவை!

  • அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் முன் ஒவ்வொருவரும் ஆர்.எஃப்.ஐ.டி அட்டையை பெறுவது கட்டாயமாகும். ஜம்மு-ஸ்ரீநகருக்குள் நுழையும்போது இந்த அட்டை உங்கள் கையில் இருக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த அட்டை வழங்கப்படுகிறது. யாத்திரை முடியும் வரை இந்த அட்டை உங்கள் கையிலோ, கழுத்திலோ இருப்பது அவசியம். 

  • யாத்திரைக்கு செல்பவர்கள் உங்கள் உடலுக்கு தகுந்தவாறு ஆடைகளை அணிவது அவசியம். அதேசமயம் பக்தர்கள் மலையேறுவதற்குப் பொருத்தமான காலனிகளும்(trekking shoes) அணிய வேண்டும். 
     
  • மலையேறும் பயணிகள் வேகவேகமாக நடப்பதை தவிக்கலாம். மெதுவாக மலையேறினால் நீண்ட தூரம் களைப்பில்லாமல் பயணிக்க முடியும். 
     
  • காஷ்மீரில் குளிர்ந்த காலநிலை நிலவுவதால், பயணிகள் போதுமானளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். இல்லையெனில் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

  • பயணிகள் மலையேற்றத்தின்போது மூச்சு விடுவதற்கு அசௌகரியம் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவ முகாமிற்குச் சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
     
  • தொடர்ந்து நடைப்பயணம் மேற்கொள்ளாமல் இடையில் சற்று ஓய்வெடுத்தப் பிறகு நடைப் பயணத்தைத் தொடங்கலாம். 
     
  • சாப்பிடும் பொருள்கள், பாட்டீல்கள் என தேவையற்ற பொருள்களை அங்கேயே வீசி மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். 

  • அமர்நாத் பக்தர்கள் மலையேறும் போது புகைப்பிடித்தல் மற்றும் அல்கஹால் அருந்துவது கூடாது. வெறும் வயிற்றில் பயணிப்பது நல்லது. 
     
  • பக்தர்கள் மலையேறுவதற்கு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காமல், அனைவரும் பயணிக்கும் பாதையில் செல்ல வேண்டும். 

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றினால், எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பாக பயணிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT