சாலைகளில் பள்ளமா? அழையுங்கள் ஒப்பந்ததாரரை! மாநகராட்சியின் ஐடியா
சாலைகளில் பள்ளமா? மிக மோசமாக உள்ளதா? உடனடியாக சாலை ஒப்பந்தப் பணியை மேற்கொண்ட நிறுவனத்தை அழையுங்கள் என்று பேனர் வைத்திருக்கிறது மும்பை மாநகராட்சி.
மும்பை: சாலைகளில் பள்ளமா? மிக மோசமாக உள்ளதா? உடனடியாக சாலை ஒப்பந்தப் பணியை மேற்கொண்ட நிறுவனத்தை அழையுங்கள் என்று பேனர் வைத்திருக்கிறது மும்பை மாநகராட்சி.
மும்பை மாநகராட்சியின் சாலை அமைக்கும் ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டத்தில் 5 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில்தான், மும்பையில் பாந்த்ரா பகுதியில் 30வது சாலையில் இப்படி ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னை புறநகர் ரயில் பயணிகள் கேட்டதும் தெற்கு ரயில்வே செய்ததும்!
எல்லாவற்றையுமே மாநகராட்சியே செய்கொண்டிருக்க முடியாது. பொதுமக்களும் பொறுப்பெடுத்துக் கொண்டு சாலைகள் மோசமாக இருந்தால் உடனடியாக அது குறித்து ஒப்பந்ததாரருக்கு தெரிவிக்கலாம் என்றும் அந்த பேனர் தெரிவிக்கிறது.
ஆனால், இது சட்டமீறல் என்று பாந்த்ரா பகுதி பாஜக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சிதான் ஒப்பந்ததாரரை நியமிக்கிறது. ஆனால் சாலையில் பள்ளம் என்றால் மக்கள் எப்படி ஒப்பந்ததாரரை நாடுவது? என்று கேள்வி எழுப்புகிறது.
இதற்கு மும்பை மாநகராட்சியோ, நாங்கள் பொறுப்பிலிருந்து நழுவவில்லை. மாறாக, குற்றச்சாட்டுகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படவே இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது என்கிறது.
எங்களிடம் முறையிட்டாலும் நாங்களும் ஒப்பந்ததாரரைத்தான் அழைப்போம் என்று தெரிவிக்கிறது.