முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்றும் முடங்கியது.

Updated On : 27 ஜூலை, 2023 at 11:25 AM
பகிர்:

தில்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்றும் முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாள்களாக மணிப்பூர் கலவரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் நேற்று கொண்டுவந்தது. இதனை அவைத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு இன்று கருப்பு உடை அணிந்து வந்த இந்தியா கூட்டணியின் எம்பிக்கள், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவைத் தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கை முன் பதாகைகளுடன் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.