இந்தியா

ஒடிசாவில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து 6 பேர் பலி!

DIN


ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுக்கியுள்ளனர். 

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், சரக்கு ரயில் பெட்டிகள் இருந்த இடத்தில் ஒதுங்கியுள்ளனர். அப்போது சரக்குப்பெட்டிகள் சரிந்து ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

முதலில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் இருவர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT