கோப்புப்படம் 
இந்தியா

உண்மையை மறைக்கவே ஒடிசா ரயில் விபத்து வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு: மம்தா குற்றச்சாட்டு!

ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

DIN

ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த ஜூன் 2-ஆம் தேதி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, ரயில் விபத்து பற்றி மத்திய அரசு ஒவ்வொரு நாளும் ஒரு தகவலை கூறுவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT