முகப்பு
இந்தியா

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 9 ஜூன், 2023 at 1:06 PM
பகிர்:

அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

நிலநடுக்கமானது இன்று காலை 10.05-க்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

டெஸ்பூருக்கு மேற்கு 39 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் 
குவஹாட்தியின் சில பகுதிகளிலும், மாநிலத்தில் பிற நகரங்களிலும் உணரப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு மற்றும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. 

முன்னதாக கடந்த மே 29-ம் தேதி ரிக்டர அளவில் 4.4 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.