கோப்புப் படம். 
இந்தியா

உ.பி.யில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த தீ விபத்து சம்பவம் குஷிநகரில் உள்ள உர்தா கிராமத்தில் நடைபெற்றது. புதன்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சங்கீதா மற்றும் அவரது 5 குழந்தைகள் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது சங்கீதாவின் கணவர் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். 

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து சங்கீதாவின் கணவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயை அணைப்பதற்குள் சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளான அன்கித்(10), லக்ஷ்மினா(9), ரீட்டா(3), கீதா(2) மற்றும் பாபு(1) ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

உயிரிழந்தோரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீ விபத்து நிகழ்ந்ததற்கான சரியான காரணத்தை அறிய போலீஸாருக்கு உத்தரடவிடப்பட்டுளள்து. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT