நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடக்கம்!
நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுமார் 62 ஆண்டுகளுக்குப் பின் மும்பை, தில்லியில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. ஜூன் 21, 1961க்குப் பிறகு முதன்முறையாக தில்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் ஹரியாணா, சண்டிகர் மற்றும் தில்லியில் பருவமழையானது இன்னும் தீவிரமடைய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
Advertisement
Advertisement
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ: ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.