திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து மாநிலங்களில் நாளை (மார்ச் 2) வாக்கு எண்ணிக்கை
திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளன.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:08 PM
திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளன.
நடப்பாண்டு நாடு முழுவதும் 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இம்மூன்று மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை நாளை பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.
Advertisement
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.