மும்பையில் மரச்சாமான் கிடங்கில் பயங்கர தீ விபத்து!
மும்பையில் மரச்சாமான் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையில் மரச்சாமான் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையின் ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள மரச்சாமான் கிடங்கில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள ராம் மந்திர் அருகே திங்கள்கிழமை காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் 3 நாள் வசூல்!
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.