மணிப்பூரில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!
மணிப்பூரில் புதிதாக வன்முறை சம்பவங்கள் பதிவாகாத நிலையில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் புதிதாக வன்முறை சம்பவங்கள் பதிவாகாத நிலையில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த வாரம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் வடகிழக்கு மாநிலத்தை உலுக்கியது. இந்த இனக்கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும், மத தலங்கள் உள்பட 1,700 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் புதிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகாத நிலையில், படிப்படியாக நிலைமை சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் ஜிரிபாம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் 6 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.