இந்தியா

நான் வெல்ல முடியாதவன், மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்: காங்கிரஸ்

DIN


புதுதில்லி: கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலத்தில் 36 மையங்களில் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக பேரவைக்கான தேர்தலில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.." என்று பதிவிட்டுள்ளது. 
                                                                

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT