முகப்பு
இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு கரோனா தொற்று!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 மே 2023, 1:18 pm IST
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,498 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,223 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,76,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 5,31,767 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,720 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 4,44,31,137 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.78 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 0.86 சதவீதமாகவும், வாராந்திர தொற்று விகிதம் 1.30 சதவீதமாகவும் உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,498 ஆக குறைந்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66,89,993 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,636 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,42,695 பேரிடம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 92.84 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments