198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு!
கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது.
கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது.
அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையைக் கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கும்போது எல்லைத் தாண்டியதாக பாகிஸ்தான் அரசு 198 மீனவர்களை கைது செய்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பிடிபட்ட 198 இந்திய மீனவர்கள் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை இரவு விடுவித்தது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.