இந்தியா

கங்கையில் கரையும் பதக்கங்கள்! மல்யுத்த வீரர்கள் ஹரித்வார் வருகை!!

சர்வதேச போட்டிகளில் வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த தங்களின் பதக்கங்களை, உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹரித்துவார் கங்கை நதியில் வீசுவதற்காக வந்துள்ளனர். 

DIN


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச வருகைபுரிந்துள்ளனர். 

சர்வதேச போட்டிகளில் வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த தங்களின் பதக்கங்களை, உத்தரப் பிரதேசத்திலுள்ள ஹரித்வார் கங்கை நதியில் வீசுவதற்காக வந்துள்ளனர். 

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ஹரித்துவாரில் குவிந்துள்ளனர்.   

மே 28ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT