முகப்பு
இந்தியா

தில்லியில் லேசான நிலநடுக்கம்!

தில்லியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் இன்று (நவ. 11) நில அதிர்வு ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 2.6ஆக பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் இன்று (நவ. 11) நில அதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 2.6ஆக பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தில்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே நிலநடுக்கத்தின் மையம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

தில்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, கட்டடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகரான தில்லியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

முன்னதாக நவம்பர் 6ஆம் தேதி தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →