இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது. 

இன்று (நவம்.16) காலை 9.34 மணிக்கு தோடா மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, புதன்கிழமை இதே மாவட்டத்தில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பயணிகள் பலியான நிலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT