பிற்பகல் 3 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் 60.52% வாக்குகளும், சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 55.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று(நவ. 17) காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | 'இஸ்ரேல் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்' - பிரதமர் மோடி
அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 55.31 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஐந்து மாநிலத் தேர்தலில் மிசோரம் மாநிலத்திற்கு கடந்த நவ. 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானுக்கு நவ. 25 ஆம் தேதியும் தெலங்கானாவுக்கு நவ. 30 ஆம் தேதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்குத் தீர்வு! 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே முடிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.