இந்தியா

அஸ்ஸாம்: 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

DIN

அஸ்ஸாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஸ்ஸாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய இந்தச் சோதனையில் 1.8 கிலோ மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், குற்றவாளிகள் வண்டியை நிறுத்தாமல்  தப்பிக்க முயற்சி செய்தபோது,  காவல்துறையினர் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்தனர் எனக் காவல்துறைத் துணைத்தலைவர்  பார்த்த சாரதி மகந்தா தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மணிப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT