இந்தியா

மணிப்பூர் வன்முறை பற்றி புத்தகம் எழுதியவர் மீது வழக்கு!

மணிப்பூர் வன்முறைச் சம்பவத்தைப் பற்றி புத்தகம் எழுதியவர் மீது அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

DIN

மணிப்பூர் வன்முறையைப் பற்றி மணிப்பூர் ஃபைல்ஸ் (மணிப்பூர் கோப்புகள்) என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பிரணவானந்த தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது இரு சமூகத்தினருக்கிடையே பகைமையை வளர்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் வெறும் ஒரு பக்கத்தின் நியாயத்தை மட்டுமே கூறி இரு சமூகத்தினருக்கு இடையே வெறுப்பை வளர்க்க பிரணவானந்த தாஸ் முயற்சிக்கிறார் என கங்லேயபாக் கன்பா லுப் என்ற அமைப்பின் இளைஞரணித் தலைவர் புகார் செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம்  சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து நடந்துகொண்டிருக்கும் மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையேயான இந்தப் பிரச்னையில் இதுவரை 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT