இந்தியா

புணேவில் பயிற்சி விமானம் விபத்து

புணேவில் பயிற்சியின் போது பியிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

DIN

புணேவில் பயிற்சியின் போது பியிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே பியிற்சி விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. பாராமதி விமானநிலையத்திற்கு வடக்கே 2 மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 
இருப்பினும் இந்த விபத்தில் பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 
மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் நடந்த 2ஆவது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த 19ஆம் தேதி கஃப்டல் கிராமம் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி மற்று துணை விமானி இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT