முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 அக்டோபர், 2023 at 11:54 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:42 AM

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்று (அக்டோபர் 22) இரவு 11 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. 

இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இத்தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகள் எதுவும் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.  

ஏற்கனவே நேபாளத்தில் நேற்று (அக்டோபர் 22) காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், மாலை 5.18 மணிக்கு 4.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதனால் பல வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதியாக இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் நேபாள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். வீடுகளுக்கு செல்ல தயங்கி வீதிகளில் இருந்து வருகின்றனர்.

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.