ரஜினிகாந்த் / சந்திரபாபு நாயுடு 
இந்தியா

சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்!

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அவரின் மகன் நாரா லோகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

DIN


சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அவரின் மகன் நாரா லோகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு நல்ல மனிதர் என்றும், தைரியமாக இருக்குமாறும் அவரின் மகனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். 

ஊழல் புகாரில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மகன் நாரா லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். 

நாரா லோகேஷ்

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சந்திரபாபு நாயுடுவை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபுவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயவாடா அருகே அமைந்துள்ள ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 

உடல்நிலை சரியில்லாததைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமீர் கோரப்பட்டது. வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி கோரப்பட்டது. இதனை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT