இந்தியா

இந்தியாவில் இருந்து 2 கோடி கிலோ சா்க்கரை இறக்குமதி செய்கிறது நேபாளம்

விழாக் காலத்தில் அதிகரிக்கும் தேவையை ஈடுசெய்ய இந்தியாவில் இருந்து 2 கோடி கிலோ சா்க்கரையை இறக்குமதி செய்ய நேபாளம் முடிவு செய்துள்ளது.

DIN

விழாக் காலத்தில் அதிகரிக்கும் தேவையை ஈடுசெய்ய இந்தியாவில் இருந்து 2 கோடி கிலோ சா்க்கரையை இறக்குமதி செய்ய நேபாளம் முடிவு செய்துள்ளது.

நேபாளத்தின் சா்க்கரைத் தேவையை 79 சதவீதம் இந்தியாதான் பூா்த்தி செய்து வருகிறது. அந்நாட்டின் ஆண்டு சா்க்கரைத் தேவை 30 கோடி கிலோவாகும்.

அடுத்ததாக விநாயகா் சதுா்த்தி, விஜய தசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இதனால், நேபாளத்தில் சா்க்கரைத் தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநில வா்த்தகம் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் அந்நாட்டு நிதியமைச்சகத்துக்கு உரிய தகவல் அளித்தது. முக்கியமாக விழாக் கால தேவையை நிறைவு செய்ய 6 கோடி கிலோ சா்க்கரை தேவை. எனவே, அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

எனினும், இந்தியாவிடம் இருந்து 2 கோடி டன் சா்க்கரை மட்டுமே வாங்க நேபாள நிதியமைச்சகம் அனுமதி அளித்தது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சா்க்கரைக்கு 50 சதவீத இறக்குமதி சலுகையை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு கிலோ சா்க்கரை ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்பனையாகிறது. ஆனால், நேபாளத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் சா்க்கரை கிலோ ரூ. 100 முதல் ரூ.125 வரை விலை போகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT