இந்தியா

உ.பி.யில் மின்தூக்கி விபத்து: 8 ஆக உயர்ந்த பலி!

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானத்திலிருந்த கட்டடத்தின் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா எக்ஸ்டென்ஷனில் கட்டுமானத்திலிருந்த கட்டடத்தின் மின்தூக்கி செயலிழந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

நொய்டாவின் அம்ரபாலியில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தில் 9 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். வெள்ளிக்கிழமை காலை மின்தூக்கி திடீரென செயலிழந்து 14வது தளத்தில் இருந்து அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை நான்கு பேரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து குறித்து கட்டட நிர்வாகத்தின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதாா் காலமானாா்

டாக்காவில் மீண்டும் விசா மைய பணிகளைத் தொடங்கியது இந்தியா: வேறு இரு இடங்களில் பணி நிறுத்தம்

5 உயா்நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு ஒப்புதல்: மக்களவையில் நகலைக் கிழித்து எதிா்க்கட்சியினா் அமளி

திருவள்ளுவா் பல்கலை. மண்டல தடகளப் போட்டி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT