இந்தியா

உ.பி.யில் மின்தூக்கி விபத்து: 8 ஆக உயர்ந்த பலி!

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானத்திலிருந்த கட்டடத்தின் மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா எக்ஸ்டென்ஷனில் கட்டுமானத்திலிருந்த கட்டடத்தின் மின்தூக்கி செயலிழந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

நொய்டாவின் அம்ரபாலியில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தில் 9 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். வெள்ளிக்கிழமை காலை மின்தூக்கி திடீரென செயலிழந்து 14வது தளத்தில் இருந்து அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை நான்கு பேரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து குறித்து கட்டட நிர்வாகத்தின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT