மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப். 26) காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம், அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிதாக தோ்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் ‘ரோஜ்கா் மேளா’ முகாம்கள் பலகட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாட்டின் 46 இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 26) நடைபெறும் ரோஜ்கா் மேளா முகாமில் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை, பிரதமா் மோடி காணொலி மூலம் பங்கேற்று வழங்கவுள்ளாா். மேலும், புதிதாக நியமனம் பெறுபவா்கள் மத்தியில் அவா் உரையாற்றுவாா். 680-க்கும் மேற்பட்ட கற்றல் படிப்புகள் கிடைக்கப்பெறும் ‘கா்மயோகி பிரரம்ப்’ வலைதளத்தில் புதிய பணியாளா்கள் பயிற்சி பெறுவா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறை, இந்திய தணிக்கைத் துறை, அணுசக்தி துறை, வருவாய் துறை, உயா்கல்வித் துறை, பாதுகாப்புத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை ஆகியவற்றில் புதிய பணியாளா்கள் இணையவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.