முகப்பு
இந்தியா

பிகாரில் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக்கொலை! 

பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மசூதன்பூர் தியாராவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
கோப்புப்படம்
பகிர்:

பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மசூதன்பூர் தியாராவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

நள்ளிரவு 1 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஆர்ஜேடி தலைவர் அனிருதா சௌத்ரியை மர்ம நபர்கள் தாக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இது தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் பாலியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

இவர் பாலியா தொகுதியில் ஆர்ஜேடி தலைவராக இருந்தவர். முன்னதாக புதன்கிழமை கயா மாவட்டத்தில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஒரே வாரத்தில் இரண்டு தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →