மாதிரி படம் ஐஏஎன்எஸ்
இந்தியா

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

டீப் ஃபேக் காணொலிகள்: நாடு எதிர்கொள்ளும் புதிய சவால்கள்

DIN

நான்கில் ஒரு இந்தியர் (22 சதவிகிதம்) தாங்கள் காணும் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தில் போலியானவற்றை எதிர்கொள்வதாகவும் பின்னர் அவை குறித்து அறிந்து கொள்வதாகவும் வியாழக்கிழமை வெளியான புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு அமைப்பான மெக்காஃபீ மேற்கொண்ட ஆய்வில், 75 சதவிகிதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் டீப் ஃபேக் தொழில்நுட்பம் கொண்டு செயற்கை நுண்ணறிவின் உதவியால் போலியாக உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை (கன்டண்ட்) காண்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த டீப் ஃபேக் தொழில்நுட்பம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பொது பிரபலங்கள் மீது அவதூறு செய்வதாகவும் (44 சதவிகிதம்) செய்தி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவும் (37 சதவிகிதம்) தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் கருதுவதாக மெக்காஃபீ தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான உள்ளடக்கங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக மெக்காஃபீயின் பொறியியல் பிரிவு இயக்குநர் பிரதிம் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 7 ஆயிரத்துக்கு அதிகமான இணைய பயனர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைபர் மோசடி, போலியான ஆபாச உள்ளடக்கம், மோசடிகள் மற்றும் வரலாற்று திரிபு ஆகியவற்றை பயனர்கள் எதிர்கொள்கின்றனர்.

இணையத்தில் பகிரப்படும் விடியோ, படங்கள் அல்லது பிரபலங்களின் பதிவுகள் போன்றவை உண்மையானது என 57 சதவிகிதம் பேர் முதலில் நம்புவதாகவும் பின்னரே போலியானதை அறிந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

64 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், ஆன்லைன் மோசடிகள் குறித்து அறிவதை செயற்கை நுண்ணறிவு கடினமாக்குவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தவறான உள்ளடக்கம், போலியான தகவல், டீப் ஃபேக் ஆகியவை குறித்து பயனர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

சேலையே பாதி மாயம் செய்யும்... கல்பனா சர்மா!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

SCROLL FOR NEXT