வாக்களிக்க காத்திருந்த மக்கள்
வாக்களிக்க காத்திருந்த மக்கள் ANI
இந்தியா

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

DIN

கேரளாவில் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றுவரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது மகக்ள் வாக்களித்துள்ளனர். அதிகாரபூர்வ தகவல்படி 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

2.77 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலம் கேரளா. இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கேரளத்தில் வெப்பநிலை 40 டிகிரியைத் தொட்டுள்ள நிலையில் தேர்தல் நாளான வெள்ளிக்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. இருந்தபோதும் மக்கள் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

கேரளத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 77.67 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதனை விட அதிக சதவிகிதம் வெள்ளிக்கிழமை பதிவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று தரப்பு வேட்பாளர்களும் சுயேட்சைகளும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 தொகுதிகளிலும் இடதுசாரிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT