வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அலுவல் மொழியாக ‘நேபாளி’ மொழி சோ்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆங்கிலம் மட்டுமே மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்த நிலையில் இப்போது ‘நேபாளி’ மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த மாநில அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி இரு அலுவல் மொழிகளிலும் வெளியிடப்படும்.
நேபாளி மொழி 1992-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது. நேபாளம், பூடான், இந்தியா, மியான்மரில் இந்த மொழி பேசப்படுகிறது. இது பெரும்பாலும் சம்ஸ்கிருதம் சாா்ந்து இயங்கும் மொழியாகும். தேவநாகரி எழுத்துமுறையைக் கொண்டது.
காங்டாக்கில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நேபாள மொழி அங்கீகரிப்பு தின நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பி.எஸ்.தமாங், நேபாளி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டாா்.
அதில், சிக்கிம் அலுவல் மொழிச் சட்டம் 1977-இன்படி மாநிலத்தின் அலுவல் மொழியாக நேபாளி மொழி அங்கீகரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பிராந்திய கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோா்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.