சாலையோர கடை மீது டேங்கர் லாரி மோதல்: 4 பேர் பலி
கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில் சாலையோர தேநீர் கடையில் இருந்தவர்கள் பலி..
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில் சாலையோர தேநீர் கடையில் லாரி புகுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
ஹிஞ்சிலி அருகே சமர்ஜோலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 59இல் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
பவானிபட்னாவில் இருந்து பெரஹாம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. டேங்கர் லாரி அஸ்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஒருவரும், மற்ற மூவரும் தேநீர் கடையில் அமர்ந்திருந்தவர்கள் ஆவார். மேலும் தேநீர் கடையிலிருந்த 13 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனா கூறினார்.
இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.