குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றதற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளா் அறிக்கையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஏ+ தரநிலையில் இடம்பெற்றுள்ளாா். அவரின் மிகச்சிறந்த செயல்பாட்டையொட்டி, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அந்த தரநிலையில் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.