பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

சிங்கப்பூர் செல்லும் மோடி!

செப். 3, 4, 5 தேதிகளில் புரூணை, சிங்கப்பூருக்கு மோடி பயணம் மேற்கொள்கிறார்

DIN

பிரதமர் மோடி அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் வாராந்திர ஊடக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசியதாவது, ``சுல்தான் ஹாஜி ஹசானல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புருனே தாருஸ்ஸலாமிற்கு பயணம் செய்யவுள்ளார்.

இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 40 ஆவது ஆண்டு நிறைவுடன் இந்த பயணம் ஒத்துப்போகிறது.

இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், புருனேயில் இருந்து பிரதமர் மோடி செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்பட்டது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்..!

தொடர் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் மழை... விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT