பந்தயம் வைத்து நாய்ச் சண்டை: 81 பேர் கைது!
ராஜஸ்தானில் பந்தயம் வைத்து நாய்ச் சண்டை நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில் பந்தயம் வைத்து நாய்ச் சண்டை நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்கர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று (டிச. 20) இரவு நாய்ச் சண்டை பந்தயம் நடத்தப்பட்டது. இந்தப் பந்தயம் ஒரு பண்ணை வீட்டில் வைத்து நடத்தப்பட்டுள்ளது.
அங்கு, காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 19 வெளிநாட்டு வகை நாய்கள் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தப் பந்தயம் நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
காவல்துறையினர் சோதனை செய்ய வந்தவுடன் அங்கிருந்த நபர்கள் சுவற்றில் ஏறிகுதித்து ஓட முயற்சித்துள்ளனர். அதில், பலரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து உரிமம் பெற்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
இதையும் படிக்க | புஷ்பா 2 திரைப்படத்தால் பிடிபட்ட கடத்தல்காரர்!
நாய்ச் சண்டை பந்தயம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட அனைவரும் பஞ்சாப் மற்றும் ஹரியானவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தனி வாகனத்தில் நாய்களை இங்குக் கொண்டு வந்திருந்தனர். சண்டையில் ஈடுபடுத்தப்பட்ட சில நாய்கள் காயத்துடன் இருந்ததால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாய்கள் காவல்துறை கண்காணிப்பில் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மிருகவதைத் தடுப்புச் சட்டம் மற்றும் சூதாட்டத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பந்தயம் தொடர்பாக சமூக வலைதளத்தில் குழு ஒன்று தொடங்கப்பட்டு 250 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.