சுட்டுக் கொலை 
இந்தியா

ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!

பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

DIN

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர்கள் தில்லியைச் சேர்ந்த விக்கி மற்றும் விபின் என்றும், ஹிசாரைச் சேர்ந்த நியா என்றும் அடையாளம் காணப்பட்டதாகப் பிஞ்சோர் போலீஸார் தெரிவித்தனர்.

உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாதவர்களால் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது மூவரும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர் என்று பஞ்ச்குலா காவல் உதவி ஆணையர் அரவிந்த் காம்போஜ் தெரிவித்தார்.

30 வயதுடைய விக்கி, குற்றப் பின்னணி கொண்டவர் மற்றும் சில வழக்குகளை எதிர்கொண்டார். மேலும் சிசிடிவி காட்சிகளையும், மற்ற தடயங்களைச் சேகரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT