இந்தியா

முறையான உணவு தராததால், தாயைக் கம்பியால் அடித்து கொன்ற மகன்!

DIN

பெங்களூரு: 40 வயதான தாயை இரும்பு கம்பியால் தாக்கி 17 வயது மகன் கொன்றதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கே.ஆர்.புரம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் வீட்டில் இருவரைத் தவிர வேறு யாருமில்லை எனவும் தெரிகிறது.

டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

விசாரணையின்போது, தாயார் தன்னை முறையாக பார்த்து கொள்ளவில்லை என்றும் சரியான உணவு தருவதில்லை என்றும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிக்கு புறப்படும்போது தாய் திட்டியதாகவும் அது வாக்குவாதமாக வளர்ந்ததாகவும் அவர் கூறினார்.

தாயாரைத் தாக்கிவிட்டு இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இளைஞனின் மூத்த சகோதரி ஒருவர் ஜியார்ஜியாவில் மருத்துவ படிப்பில் உள்ளார். 

இது  குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT