முகப்பு
இந்தியா

அரவிந்த் கேஜரிவால் மீது அமலாக்கத்துறை புகார்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:40 PM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.

இதனால், அமலாக்கத்துறை இயக்குநரகம் தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. நீதிமன்றம் இன்று சில சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை விசாரித்து, மீதமுள்ள சமர்ப்பிப்புகள் மற்றும் பரிசீலனைக்காக பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்ததுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →