இந்தியா

அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலில் பாலராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

DIN

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் சிலை கடந்த மாதம் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி பங்கேற்ற கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, ராமா் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தா்கள் ராமா் கோயில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

ராமா் கோயிலின் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலில் பாலராமரை தரிசிக்க வரும் பக்தர்கள் வழக்கத்தைவிட அதிகமாக குவிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

மகாத்மா மரணித்த போது...

SCROLL FOR NEXT